BREAKING NEWS

பி.எம்.கிசான் திட்டத்தில் தொடர்ந்து பயனடைய இ – கேஒய்சி வருகிற 31ந் தேதிக்குள் விவசாயிகள் செய்து முடிப்பது அவசியம்.

பி.எம்.கிசான் திட்டத்தில் தொடர்ந்து பயனடைய இ – கேஒய்சி வருகிற 31ந் தேதிக்குள் விவசாயிகள் செய்து முடிப்பது அவசியம்.

மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவி புரியும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது . இதுவரை இதில் தற்போது 12 வது தவணை உதவி தொகை குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது .

இந்திய நாட்டின் முதுகெலும்பாக இந்த வகையில் புரியும் விவசாயிகள் தான் நாட்டில் விளங்குகின்றனர் . அதனால் இவர்களுக்கு உதவி திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கி வருகிறது .
இத்திட்டத்தில் ஒரு வருடத்திற்கு 3 தவணைகளாக 4 மாதங்களுக்கு நேரடியாக ஒரு முறை ரூ .2000 / -என மொத்தம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

ஆண்டுக்கு ரூ .6000 உதவித்தொகை 11 தவணை வரை இந்த திட்டத்தில் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது 12 வது தவணை தொகையை பெற சில விதிமுறைகளை மத்திய அரசு கட்டாயப்படுத்தியுள்ளது . அதாவது இந்த திட்டத்தில் உள்ள விவசாயிகள் 12 வது தவணைக்கு இ – கேஒய்சி கீழ்கண்டவாறு சரிபார்ப்பு செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது . அத்துடன் இதற்கு வருகிற ஆகஸ்ட் 31 ம் தேதி வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

முதலாவதாக www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணினை உள்ளீடு செய்து அவர்களது இணைக்கப்பட்டுள்ள கைப்பேசிக்கு வரும் ஓ.டி.பி உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தொலைபேசி எண்ணை இணைக்காத ஆதார் விவசாயிகள் இ – சேவை மையத்திற்கு சென்று கைரேகை பதிவு செய்யவும் மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க விவரங்களை பெற்று பணியாளர்களை அணுகி கேட்டுக்கொள்ளப்படுகிறது .
மேற்காணும் வழிமுறைகளை வருகிற 31 தேதிக்குள் முடித்து இத்திட்டத்தில் வேளாண்மை உதவி தொடர்ந்து பயனடைய திருவிடைமருதூர்,திருப்பனந்தாள்,வட்டார பயனாளிகளை வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா தெரிவித்துள்ளார் .

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )