BREAKING NEWS

புகையில்லா போகியை கொண்டாட வலியுறுத்தி போடி தேவர் சிலை முன்பாக கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

புகையில்லா போகியை கொண்டாட வலியுறுத்தி போடி தேவர் சிலை முன்பாக கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

செய்தியாளர் மு. பிரதீப்.

புகையில்லா போகியை கொண்டாட வலியுறுத்தி போடி தேவர் சிலை முன்பாக கையெழுத்து இயக்கத்தை மாணவ மாணவிகளின் மனித சங்கிலி நிகழ்ச்சியினை போடி நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் துவக்கி வைத்தார்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பொங்கல் பண்டிகை முதல் நாளான போகிப் பண்டிகையில் பழைய மெத்தைகள் பிளாஸ்டிக் பொருட்கள் டயர் உள்ளிட்ட பொருட்கள் இருப்பதற்கும் பொது இடங்களில் கொட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

இந்நிலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட மனித சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

போடி நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் வித் இயக்கம் மற்றும் மனித சங்கிலி நிகழ்ச்சிகளை துவங்கி வைத்து போடி தேவர் சிலை முன்பாக வைக்கப்பட்ட கையெழுத்து பேனரில் கையொப்பமிட்டார்.

 

 

உடன் போடி நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் ஆர்வத்துடன் கையெழுத்து இயக்க பேனரில் கையொப்பமிட்டு போகி பண்டிகை புகையில்லா போகி பண்டிகையாக கொண்டாடுவதற்கு உறுதி எடுத்துக் கொண்டனர்.

 

CATEGORIES
TAGS