BREAKING NEWS

புதிய மின் மீட்டரை பொருத்த கூடுதலாக 2500 ரூபாய் கேட்ட மின்வாரிய ஊழியர்களை அழைத்துச் செல்ல தாம்பூல தட்டுடன் வந்ததால் பரபரப்பு

புதிய மின் மீட்டரை பொருத்த கூடுதலாக 2500 ரூபாய் கேட்ட மின்வாரிய ஊழியர்களை அழைத்துச் செல்ல தாம்பூல தட்டுடன் வந்ததால் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சி சாமிரெட்டி கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (40). இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஒன்றிய குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் லோகநாதன் வசிக்கும் பகுதியில் புதிய வீடு ஒன்று கட்டியுள்ளார்.

அதற்கு மின் இணைப்பு வேண்டி ஒரு மாதங்களுக்கு முன்பு முறையாக அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தியுள்ளார். 1 மாதம் கடந்த நிலையில் மின் இணைப்புக்கான பதிவு எண் மட்டும் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் மின் மீட்டர் பொருத்தாமல் கிடப்பில் போடப்பட்டதாக தெரிகிறது. அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது அதிகாரிகள் பண நோக்கத்துடன் மழுப்பலான பதிலை தெரிவித்துள்ளனர். மேலும் கூடுதலாக 2500 ரூபாய் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மின்வாரிய அலுவலகத்திற்கு கழுத்தில் வாசகங்கள் அடங்கிய அட்டையை தொங்கவிட்டபடி தாம்பூல தட்டுடன் லோகநாதன் மின்வாரிய அலுவலகம் வந்தார். அவரின் கழுத்தில் தொங்கவிடப்பட்ட அட்டையில் கும்மிடிப் பூண்டி மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழி யர்களே, உங்கள் பவர் என்வென்று தெரியாமல் புது மின் இணைப்பு பெற அரசு நிர்ணயித்த கட்டண தொகையை மட்டும் செலுத்திவிட்டேன்.

மன்னிக்கவும், உங்கள் பவர் மின்சாரத்தை விட பெரியது என்று தெரிந்துக் கொண்டேன் யார்யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று சொன் னீர்கள் என்றால் கொடுக்க தயாராக உள்ளேன். தாம்பூல மரியாதையு டன் தாமதம் இல்லாமல் மின் மீட்டர் அமைக்கவும் என தெரிவித்தபடி அதிகாரிகளை நெருங்கினார். இதை கண்ட அதிகாரிகள் அங்கிருந்து அலறி ஓட்டம் பிடித்து அரை மணி நேரத்தில் மீட்டரை பொருத்தி பயனாளியை சமாளித்தனர். இச்சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this…

CATEGORIES
TAGS