BREAKING NEWS

புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரர் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாயில் கட்டப்பட்ட புதிய வீடு – கிரிடாய்(GREDI) சார்பில் வழங்கப்பட்டது.

புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரர் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாயில் கட்டப்பட்ட புதிய வீடு – கிரிடாய்(GREDI) சார்பில் வழங்கப்பட்டது.

 

புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சவலப்பேரியை சேர்ந்த இராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு கிரிடாய்(GREDI) சார்பில் 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கயத்தாரில் கட்டப்பட்ட புதிய வீடு ஒப்படைக்கப்பட்டது.

 

 

கோட்டாட்சியர் மகாலட்சுமி புதிய வீட்டிற்கான சாவியை சுப்பிரமணியன் மனைவி கிருஷ்ணவேணியிடம் வழங்கினார்.

 

 

2019 ல் ஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில், இராணுவ வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர்.

 

இந்ததாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த இராணுவ வீரர்கள் அரியலூர் சிவசந்திரன், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சவலப்பேரி சுப்பிரமணியன் இந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்தனர்.

 

 

புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களுக்கு கிரிடாய்(GREDI) என்ற கட்டுமான சங்கம் சார்பில் வீடுகள் கட்டித் கப்பட்டுள்ளது.

 

அந்த வகையில் வீர மரணம் அடைந்த சவலப்பேரி சுப்பிரமணியன் குடும்பத்திற்கு கயத்தார் ஜின்னா நகரில் 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கிரிடாய்(GREDI) அமைப்பு சார்பில் புதிய வீடு கட்டி முடிக்கப்பட்டது.

 

 

இந்த வீடு ஒப்படைப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி கலந்து கொண்டு புதிய வீட்டை திறந்து வைத்து வீர மரணம் அடைந்த சுப்பிரமணியன் மனைவி கிருஷ்ணவேணியிடம் ஒப்படைத்தனர். நிகழ்ச்சியில் கயத்தார் தாசில்தார் சுப்புலட்சுமி,கிரிடாய்(GREDI) அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )