BREAKING NEWS

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை 

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை 

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் (சென்னை தலைமை அலுவலகம் மற்றும் கன்னியாகுமரி படகு துறை) பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பேச்சு வார்த்தையில் சார்பில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் T.N வெங்கடேஷ், தலைமையிலான செயலாளர் குழுவினருடன் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் சங்க தலைவர் ஆர் ரசல் செயலாளர் சகாய மார்சலின், பொருளாளர் முத்துவேல் பிள்ளை, துணைச் செயலாளர் விஸ்வநாதன், தொழிலாளர் முன்னேற்ற பேரவை நிர்வாகிகள் வெங்கடாசலம், ஜொதீசன், ராஜேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொழிலாளர் துறை ஆணையர் S.A ராமன், IAS, சிறப்பு இணை ஆணையர் எல்.ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

01.04.2019 முதல் 31.3.2023 வரையிலான நான்காண்டு காலத்துக்கான ஒப்பந்தத்தின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1.04. 2019 முதல் ஏற்கனவே பெற்று வரும் ஊழியத்தில் ஆறு சதவீத ஊதிய உயர்வு, பத்தாண்டுகள் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு கூடுதலாக மூன்று சதவீத ஊதிய உயர்வும் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு உதவி செய்த பூம்புகார் நிறுவனத் தலைவர் மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகளுக்கும், சிறு துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் பூம்புகார் நிறுவன தொழிலாளர்கள் சார்பில் தொழிற்சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS