பெளர்ணமி தினத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியக் கோவில் பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ சாதத்தை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைப்பெற்றது.

ஐப்பசி மாதம் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு, உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியக் கோவில் பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ சாதத்தை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைப்பெற்றது. 500 கிலோ காய்கறிகள், இனிப்புகளால் பந்தல் தோரணம் கட்டப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று பெருவுடையாரை தரிசனம் செய்து செல்கின்றனர்.
ஐப்பசி மாதம் பவுர்ணமியை முன்னிட்டு, தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு, 1,000 கிலோ அரிசி, 500 கிலோ காய்கறி, இனிப்பு வகையால் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது.
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில், லிங்கம், 12 அடி உயரமும், ஆவுடையார், 54 அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட பிரமாண்டத் திருமேனியாகத் மூலவரான பெருவுடையார் திகழ்கிறார்.
பெருவுடையாருக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறும். இந்தாண்டு பக்தர்களால், 1,000 கிலோ பச்சரிசி, 500 கிலோ காய்கள், இனிப்பு வகைகள், மலர்கள் வழங்கப்பட்டன.
பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் பந்தப் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப் பட்டது.
இரவு லிங்கத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கும், கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்படும் மீதமுள்ள அன்னம், அருகில் உள்ள கல்லணைக் கால்வாயில் நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவாகப் போடப்படும்.
இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செல்கின்றனர் இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தானம், ஹிந்து சமய அறநிலையத்துறையினர் செய்து இருந்தனர்.