பேரணாம்பட்டு அருகே மலைகளில் உள்ள பாறை இடுக்குகளில் சுமார் 2300 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன

பேரணாம்பட்டு அருகே மலைகளில் உள்ள பாறை இடுக்குகளில் சுமார் 2300 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன
இது என்ன பாறை இடுக்குகளா அல்லது கள்ளச்சாராய குடோனா போலீசாரே திகைக்கும் அளவிற்கு கள்ளச்சாராய பதுக்கல்
வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வரும் நிலையில்
மலை மற்றும் காப்புக்காட்டு பகுதிகளில் பிளாஸ்டிக் ட்ரம்களில் கள்ளச்சாராய ஊரல்களை பதுக்கி வைத்திருப்பதை போலீசார் தொடர்ந்து கண்டுபிடித்து அழித்து வருவதினால்
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் புதுவிதமாக மலைகளில் உள்ள பாறை இடுக்குகளில் கள்ளச்சாராய ஊரல்கள் இடுவதற்கு பயன்படுத்துவது கண்டுபிடித்து இன்று அதனை அழித்தனர்.
பேரணாம்பட்டு தாலுக்கா பகுதிகளில் உள்ள சாத்கர் மலைப்பகுதியில் உள்ள டோபிபாறை, கடம்புக்கானார், ஒட்டியாங்கால் ஆகிய இடங்களில் மிகப்பெரிய பாறைகளின் இடுக்குகளில் சோதனை மேற்கொண்ட குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில்
2300 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் பாறை இடுக்குகளில் இருப்பதை கண்டுபிடித்த போலீசார் அதனை அழித்தனர்.
இது என்ன பாறை இடுக்குகளா அல்லது கள்ளச்சாராய குடோனா என போலீசாரே திகைக்கும் அளவிற்கு கள்ளச்சாராய பதுக்கல் இருந்துள்ளது.