பேரணாம்பட்டு தபால் நிலையத்தில் நடைபெறும் தில்லுமுல்லு வேலைகள் .மாவட்ட தபால் நிலைய கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா ?

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தபால் நிலைய போஸ்ட் மாஸ்டராக இருப்பவர் லோகநாதன். இவர் வருகைக்குப் பிறகு பேரணாம்பட்டு தபால் நிலையம் கோமாநிலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
அதாவது இங்கு பணிபுரியும் அரங்கநாதன் என்பவன் .தபால் அட்டையையோ ,தபால் கவரையோ .ஸ்டாம்புகளையோ .கேட்டு 20,50,100.ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் .சில்லறை இல்லை மீதி பணத்திற்கும் தபால் அட்டையையோ தபால் கவரையோ .தபால் ஸ்டாம்பயோ வாங்கிக் கொள்ளுங்கள் என்று வலு கட்டாயமாக மீது சில்லறைக்கு பதிலாக மேற்கண்ட பொருட்களை வலுக்கட்டயமாக திணிக்கிறார்.
என்றும் நான்கு மணிக்கு திருக்கப்பட வேண்டிய கடைசி திறப்பை கடைசி திறப்பாக இரண்டு மணிக்கே திறந்து .வெளியூருகளுக்கு மூட்டைகளை எல்லாம் மூட்டை கட்டி அனுப்பி விடுவதாகவும்
இரண்டு மணியிலிருந்து 4 மணி வரை போடப்படும் தபால்களை .மறு நாளைக்கு அனுப்புவதாகவும் இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு. கடிதங்கள்சென்று சேர்வதில்லை என்றும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.எல்லாவற்றிக்கும் மேலாக போஸ்ட் மாஸ்டர் லோகநாதன் .3 மணிக்கே வீட்டுக்கு கிளம்புவதாகவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. ரயிலில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரன் கூட அந்த ரயில் பெட்டியை சுத்தம் செய்துவிட்டு ரயில் பயணிகளிடம் பிச்சை கேட்கிறான் அவனுக்கு உள்ள பொறுப்பு கூட போஸ்ட் மாஸ்டர் லோகநாதனுக்கு இல்லை என்றும் அரசாங்க பணத்தை சம்பளமாக பெற்றுக்கொண்டு வாங்கிய பணத்திற்கு வக்கனையாக வேலை செய்யாமல் தண்ட சம்பளம் பெறும் போஸ்ட் மாஸ்டர் லோகநாதனை போன்றவர்கள் இனிவரும் காலங்களிலாவது தனது தவறை திருத்திக் கொண்டு ஒழுங்காக பணி செய்தால் அது நியாயமாக இருக்கும். அதைவிடுத்து .இப்படி மூன்று மணிக்கெல்லாம் வீட்டிற்கு கிளம்பி .தண்ட சம்பளம் பெற்றால் அது அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் .தக்கவே தக்காது என்றும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது .
எனவே இது குறித்து .மாவட்ட தபால் நிலைய கண்காணிப்பாளர் .நேரில் ஆய்வு செய்து தப்பு செய்யும் மேற்கண்ட நபர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதும் மாவட்ட கண்காணிப்பாளரின் கைபேசி நம்பரையும் கைபேசி நம்பரையும் தொலைபேசி நம்பரையும் கேட்டால் எங்களிடம் இல்லை என்று தபால் துறை ஊழியர்களான பழனியும்,அரங்கநாதனும் கூறுவது ஏற்புடையதாக அல்ல என்றும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது இதுகுறித்தும் மாவட்ட தபால் நிலைய கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே. பேரணாம்பட்டு பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்