BREAKING NEWS

பேரணாம்பட்டு மத்தூரில் பொது மக்களுக்கு இடையூறாக செயல்படும் பர்ஹான் கம்பெனி.

பேரணாம்பட்டு மத்தூரில் பொது மக்களுக்கு இடையூறாக செயல்படும் பர்ஹான் கம்பெனி.

பேரணாம்பட்டு அடுத்த மத்தூர் கிராமத்தில் புதிதாக பர்ஹான் மெட்டல்ஸ் கம்பெனி என்று ஒரு புதிய கம்பெனி துவங்கப்பட்டுள்ளது இந்த கம்பெனி பேரணாம்பட்டிலிருந்து,..

ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், வேலூர் போன்ற ஊர்களுக்கு செல்ல மாற்று பாதையாகும் இந்த இடத்தில் இந்த கம்பெனியினர் புகை கூண்டு இல்லாமல் இந்த கம்பெனியில் புகையை வெட்ட வெளியில் வெளியேற்றும் புகையால் இந்த வழியாக செல்லும் பொது மக்களுக்கு மூச்சு திணறல் இருமலும் ஏற்படுவதாக இதனால் இப்பகுதியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கும் தொந்தரவுக்கும் ஆளாகின்றனர்.

இது குறித்து வேலூர் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரி ரவிச்சந்திரன் நேரில் ஆய்வு செய்து இந்த கம்பெனி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS