பேர்ணாம்பட்டு ஊராட்சியில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கும் அவலம் . ஊராட்சி மன்ற தலைவரின் நத்தனப் போக்கு
வேலூர் மாவட்டம்,
பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் ஏரி குத்தி ஊராட்சி சாக்கடை கழிவு நீர்களை சுத்தம் செய்யாததால் ஏறி குத்தி மேடு ஹபீப் நகரில் பெரும்பாலான தெருக்களின் சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்கிறது.
இதனால் கழிவு நீர்கள் வெளியேறாமல் இருக்கிறது. இதனால் கொசு தொல்லை அதிகமாகி பகுதிகளில் வாழ்வு மக்களின் தூக்கத்தை கெடுக்கிறது. மேலும் இந்த கழிவு நீர் தேங்கி நிற்பதால் குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் மலேரியா காய்ச்சல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏறி குத்தி ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதேவிக்கு எடுத்துச் சொல்லியும் அதை கண்டுகொள்ளாமல் தான் வைத்திருக்கும் மல்லிகை கடையில் வியாபாரம் செய்து கொண்டு உட்கார்ந்து விடுகிறார்.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் சொர்ணலதா இதில் தலையிட்டு சாக்கடை கழிவு நீர் அபூர் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.