பேர்ணாம்பட்டு சாத்கர் மாலையில் அருகே 3000 லிட்டர் கள்ளசாராய ஊரல் அழிப்பு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி.

வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் விதமாக காவல் துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில்,..
குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் கிருஷ்ணவேணி தலைமையிலான காவல் துறையினர் பேரணாம்பட்டு அடுத்த சாத்கர் மலைப்பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனையில் சாராயம் காய்ச்ச இருந்த இடங்கள் கண்டறிந்து 3000 லிட்டர் கள்ள சாராய ஊரல் மற்றும் மூலப் பொருட்களை கண்டுபிடித்து அதிரடியாக அழித்தனர்.
மேலும் இந்த ஊரல்களை யார் பதுக்கி வைத்தது என்பது குறித்து குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES குற்றம்
TAGS கள்ளச்சாராய உறல் அழிப்புகள்ளச்சாராயம்குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவுதமிழ்நாடுதலைப்பு செய்திகள்பேரணாம்பட்டுபேரணாம்பட்டு சாத்கர் மாலையில் அருகே 3000 லிட்டர் கள்ளசாராய ஊரல் அழிப்புமுக்கிய செய்திகள்வேலூர்வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணாவேலூர் மாவட்டம்