BREAKING NEWS

பொதுமக்களிடம் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி வசூல் செய்யும் வேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராஜ்குமார்: அரசு நடவடிக்கை எடுக்குமா?

பொதுமக்களிடம் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி வசூல் செய்யும் வேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராஜ்குமார்: அரசு நடவடிக்கை எடுக்குமா?

வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக இதற்கு முன்னர் பணியாற்றியவர் மாணிக்கம். அவர் பதவி உயர்வு பெற்று வேறு இடத்திற்கு மாறுதலாகிச் சென்று விட்டார்.

இந்நிலையில் இந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் பணியாற்றி வந்த ராஜ்குமார் என்பவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் இதையடுத்து இவர் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பொறுப்பேற்று கொண்டார்.

இவர் என்றைக்கு வேலூரில் மோட்டார் வாகன ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்டாரோ அன்று முதல் பொதுமக்களை வாட்டி வதைப்பது, வறுத்தெடுப்பது, அவர்களை அலைகழிப்பது மற்றும் அவர்களது கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி வசூல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அத்துடன் வாகன தணிக்கைக்கு வரும் வாகன ஓட்டுனர்களிடமும், தனியார் புரோக்கர்களிடமும் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார் கடுமையாக நடந்து கொள்வதாக இவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.

அத்துடன் இவரை சந்திக்கச் செல்லும் செய்தியாளர்களை தரக் குறைவாக நடத்துவது, அவர்களிடம் ஒருமையில் பேசுவது மற்றும் அநாகரீகமான வார்த்தைகளை கூறி திருப்பி அனுப்புவது என்று இவர் விரும்பத்தகாத செயல்களை தொடர்ந்து செய்து வருவதாக தகவல்கள் பரவி வருகிறது.

உங்கள் நிறுவனத்தில் உங்களுக்கு மாத ஊதியம் தரவில்லையா? ஏன் இது போன்ற அலுவலகங்களுக்கு வருகிறீர்கள் என்று செய்தியாளர்களை பார்த்து தேவையற்ற கேள்விகளை எழுப்புவதோடு அவர்கள் மனம் நொந்து போகும் அளவிற்கு தேவையில்லாத கேள்விகளை கேட்டு திருப்பி அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் இந்த அரிச்சந்திர மகா பிரபு. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் இவர் பணிபுரிந்த போது இது போன்ற விருப்பத்தகாத செயல்களில் ஈடுபட்டதால் இவரை வேலூர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்துள்ளது போக்குவரத்து துறை.

ஆனால் இங்கு வந்து தனது போக்கை மாற்றிக் கொள்ளாமல் பழைய பாதையிலேயே இவர் பயணித்து வருகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

செய்தியாளர்களை பார்த்து உங்களால் என்ன செய்து கொள்ள முடியுமோ அதை செய்து கொள்ளுங்கள். எந்த கொம்பனாலும் என்னை ஆட்டவோ அசைக்கவோ முடியாது. முடிந்ததை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.

நானும் பார்த்துக் கொள்கிறேன் என்று முண்டா தட்டுகிறார் இந்த அரிச்சந்திரன் வீட்டு பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜ்குமார். இவர் ஒருவர் தான் இந்தியாவிலேயே லஞ்சம் வாங்காமலும் லஞ்சம் என்ற சொல்லையே என்ன என்று அறியாதவர் போல பாசாங்கு காட்டுகிறார் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை.

லஞ்சத்திலேயே புரளும் இந்த ராஜ்குமார் போன்ற பசுத்தோல் போர்த்திய புலிகளின் முகத்திரையை கிழிப்பது தான் பத்திரிகையாளர்களின் தலையாய கடமை என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை.

ஆனால் அவர்களையே கொச்சையாக பேசுவது நீங்கள் என்ன ஒவ்வொரு அலுவலகமாக சென்று இப்படித்தான் பிச்சை எடுப்பீர்களா? என்று வார்த்தைகளால் சொல்ல முடியாத, அச்சில் ஏற்ற முடியாத சில வாசகங்களை இவர் கூறி வருவதாகவும், நீ எந்த பத்திரிக்கையில் பணியாற்றுகிறாய் என்று ஒருமையில் கேட்டு அந்த பத்திரிகையை காட்டு என்றும்,

அடையாள அட்டையை காட்டு என்றும் பார்த்துவிட்டு அதற்குப் பிறகு அதில் கையொப்பமிட்டு இவருக்கு புரோக்கராக செயல்படும் டிரைவிங் ஸ்கூல் உரிமையாளரிடம் காண்பித்து விட்டு ப வைட்டமினை பெற்றுச் செல்லுங்கள் என்று நா கூசாமல் சொல்கிறார இந்த ஜெகஜால கில்லாடி ராஜ்குமார்.

இவர் இவரை நாடிவரும் பொதுமக்களிடம் கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கி வசூல் செய்வதில் வல்லவராக திகழ்கிறார். லாரி, பேருந்துகள் மற்றும் நான்கு சக்கர, இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் என அனைவரிடமும் கராறாக பணத்தை வசூல் செய்வதில் வல்லவராக திகழ்கிறார்.

ஆதலால் இவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை இரு கண்களையும் வைத்து கண்காணித்தால் இவர் சிக்குவது உறுதி. இவரை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்பது மட்டும் உண்மை. நாட்டில் நான் நேர்மையானவன் என்று சொல்லிக்கொண்டு லஞ்சம் வாங்குவதில் கைதேர்ந்த ராஜ்குமார் போன்றவர்கள் பசுத்தோல் போர்த்திய புலிகளாக நாட்டில் உலா வந்து கொண்டுள்ளனர்.

இவர்களது முகத்திரை விரைவில் கிழிக்கப்படும். இவர்கள் யார் என்று நாட்டுக்கு விரைவில் அறிவிக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் போக்குவரத்து இணை ஆணையர் ஆகியோர் இவரது செயல்பாடுகளை உன்னிப்பாக கண்காணித்தால் உண்மை என்னவென்று உலகிற்கும் தெரியும்.

இவரும் நிரந்தரமாக வீட்டிற்கு செல்வதும் நடக்கும் என்பது நிதர்சன உண்மை. இவற்றிற்கெல்லாம் காலம் விரைவில் பதில் சொல்லும். அதுவரை காத்திருப்போம்.!

செய்தி ஆசிரியர் ச வாசுதேவன் 

CATEGORIES
TAGS