BREAKING NEWS

பொறையார் கல்லூரி முதல்வர் பொறுப்பேற்பு..

பொறையார் கல்லூரி முதல்வர் பொறுப்பேற்பு..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி புதிய முதல்வர் பொறுப்பேற்பு விழா நடைபெற்றது.


இக்கல்லூரியில் துணை முதல்வராக பணியாற்றி வந்த முனைவர் எஸ். ஜான்சன் ஜெயக்குமார் 11 வது முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் பேராயர் முனைவர் மாமறைதிரு கிறிஸ்டியான் சாம்ராஜ், மாவட்ட ஓய்வு பெற்ற நீதிபதியும், கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளருமான என்.ரத்தினராஜ் ஆகியோர் முன்னிலையில் புதிய முதல்வராக முனைவர் எஸ்.ஜான்சன் ஜெயக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் கல்லூரி காசாளர் ஜூலியஸ் விஜயகுமார்,தரங்கை மறை மாவட்டத்தை சேர்ந்த சபைகுருமார்கள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


புதிய முதல்வராக பொறுப்பேற்ற முனைவர் எஸ்.ஜான்சன் ஜெயக்குமார் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கும் மாணவ மாணவிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பேன் என்றும் கூறினார்.

செய்தியாளர் க. கார்முகிலன்.

CATEGORIES
TAGS