BREAKING NEWS

பொலிரோ – இரண்டு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி.

பொலிரோ – இரண்டு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரியூரை சேர்ந்தவர் கோமதிநாயகம் அப்பகுதியில் ஹோட்டல் தொழில் நடத்தி வருகிறார்.

 

இந்நிலையில் (24.2.2023) இரவு சங்கரன்கோவிலில் இருந்து ஹோட்டலுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு தனது இரண்டு சக்கர வாகனத்தில் பெரியூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

 

 

அப்போது எதிரே வந்த பொலிரோ வாகனம் இவரது வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது இவ்விபத்தில் கோமதிநாயகம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

 

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான கோமதிநாயகம் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS