போடிநாயக்கனூரில் பழைய நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்டு வரும் நகராட்சி பயணியர் தங்கும் விடுதி சமூக விரோதிகளின் கூடாரமாகமாறி வருகிறது.

போடி செய்தியாளர் மு.பிரதீப்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் சுப்புராஜ் நகரில் அமைந்துள்ள பழைய
நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்டு வரும் நகராட்சி பயணியர் தங்கும் விடுதி சமூக விரோதிகளின் பாசறையாக மாறிவரும் அவலம்.
மது பிரியர்கள் கஞ்சா பிரியர்கள் மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாகமாறி வருகிறது. குடிபோதையில் இங்குள்ள ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் கதவுகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். மேலும் பல்வேறு சமூக விரோத செயலுக்கு இந்த கட்டிடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
நகராட்சி விருந்தினர் தங்கும் விடுதி தற்போது மது பிரியர்கள் மற்றும் சமூக விரோதிகளின் உல்லாச விடுதியாக மாறி வருகிறது என்றும் பகலிலேயே பொதுமக்கள் இப்பகுதியில் செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர் என்றும் மக்கள் வேதனை.
பகல் இரவு என்று வராமல் பல சமூக விரோத செயல்கள் இப்போது நடைபெற்று வருவதாக மக்கள் வேதனை இதன் அருகிலேயே பள்ளிக்கூடம் மற்றும் அங்கன்வாடி கட்டிடம் அமைந்துள்ளது வேதனைக்குரியது.
பலமுறை இப்பகுதி மக்கள் புகார் அளித்தும் நூற்றாண்டு கால நினைவு பயணிகள் தங்கும் விடுதி என்று பெயர் தாங்கி நிற்கும் இந்தக் கட்டடத்தின் அவல நிலையை மாற்ற நகராட்சி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது ஏன் என்றும் ரூபாய் ஒரு கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி பயணியர்களுக்கா அல்லது சமூக விரோதிகளுக்காகவா என்று மக்கள் வேதனையுடன் கேள்வி எழுப்பி உள்ளனர்.
நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இங்கு கூடும் சமூக விரோதிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று மக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.