போடிநாயக்கனூர் அருகே கேரள அரசு பேருந்தில் மோதி சம்பவ இடத்திலேயே தேனி வாலிபர் பலி.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பெரியாண்டவர் குளத்து சந்தில் வசித்து வருபவர் செந்தில் பிரபு (46) வழக்கறிஞருக்கு பயின்ற இவர் தற்போது சொந்தமாக விவசாயம் பார்த்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனது தாயருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை முந்தல் அருகே உள்ள தனது தோட்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது எதிரே ஆட்டோ ஒன்று வந்துள்ள நிலையில் ஆட்டோவில் இருந்து சற்று விலகிச் செல்வதற்கு முயற்சித்த பொழுது எதிரே வேகமாக வந்த கேரள அரசு பேருந்து நேருக்கு நேர் மோதியதில் பேருந்தின் முன்புறம் சிக்கிக்கொண்ட செந்தில் பிரபு சுமார் 15 அடி தூரம் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குரங்கனி காவல்துறையினர் இறந்தவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து கேரள அரசு பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.