போடிநாயக்கனூர் தாலுகாவில் மேலசொக்கநாதபுரம் பேருராட்சிக்கு உட்பட்ட பயன்பாடுகள் நிழற்க்குடை சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வருமா மக்களின் எதிர்பார்ப்பு.

போடி செய்தியாளர் மு. பிரதீப்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகாவில் மேலசொக்கநாதபுரம் பேருராட்சிக்கு உட்பட்ட போடி தர்மத்துப்பட்டியில் பயனிகள் நிழற்க்குடை பராமரிப்பு சுகாதார மற்ற நிலையில் உள்ளது.
இதனால் பயனிகளுக்கு நோய்த்தொற்று அபாயம் உள்ளது இதனால் நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்ப்பு!
சி பி ஐ இந்திய கம்யுனிஸ்ட் கட்சி போடிநாயக்கனூர் ஒன்றியம் மாவட்ட குழு திரு அ.வீரராஜ் விரைவில் இதனை சீர் செய்ய வேண்டும் என்றும் மக்கள் பயன்பாட்டிற்கு இந்த பயணியர் நிழற்குடையை கொண்டு வர வேண்டும் என்றும் போடி மேல சொக்கநாத பேரூராட்சி அலுவலகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிழற்குடையில் சமூக விரோத செயல்களும் சட்ட விரோத செயல்களும் அதிக அளவில் நடைபெறுவதால் இதனை கூடிய விரைவில் சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.