BREAKING NEWS

போடி நகராட்சிக்கு நிதி திரட்ட பாஜகவினர் பிச்சையெடுக்கும் போராட்டம்.

போடி நகராட்சிக்கு நிதி திரட்ட பாஜகவினர் பிச்சையெடுக்கும் போராட்டம்.

போடியில் திங்கள் கிழமை, நகராட்சிக்கு நிதி திரட்டுவதற்காக பாரதிய ஜனதா கட்சியினர் திருவோடு ஏந்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

போடி நகராட்சியில் சாலை வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கூறும்போது நகராட்சிக்கு நிதி ஒதுக்கீடு வரவில்லை என அதிகாரிகள் கூறுவதாகவும், இதனால் நகராட்சியில் அடிப்படை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுவதாகவும் கூறி போடி நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் நகராட்சிக்கு நிதி திரட்டுவதற்காக திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

 

மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். சட்டப்பேரவை தலைவர் தண்டபாணி முன்னிலை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர்கள் மணிகண்டன், சித்ராதேவி, பாஜக நகர நிர்வாகிகள் சந்திரசேகர் உள்ளிட்டோர் காவி உடை அணிந்து, நெற்றியில் நாமம் சூட்டி, திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேவர் சிலை முதல் நகராட்சி அலுவலகம் வரை பிச்சை எடுத்த பாஜகவினர் நகராட்சி அலுவலகத்திற்குள் சென்று பிச்சை எடுத்த பணத்தை ஒப்படைக்க சென்றனர். அங்கு 30-க்கும் மேற்பட்ட போலீஸார் வரவழைக்கப்பட்டு பாஜகவினர் உள்ளே செல்ல முடியாதபடி தடுத்து நின்றனர். இதனால் போலீஸாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )