BREAKING NEWS

போலீசாரின் கொடி அணி வகுப்பு பேரணி இன்று நடந்தது – துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக வந்தனர்

போலீசாரின் கொடி அணி வகுப்பு பேரணி இன்று நடந்தது – துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக வந்தனர்

பட்டுக்கோட்டையில் பேண்ட், வாத்தியம் முழங்க போலீசாரின் கொடி அணி வகுப்பு பேரணி இன்று நடந்தது – துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக வந்தனர்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு பேரணி இன்று நடந்தது. கொடி அணி வகுப்பு பேரணி பேண்ட், வாத்தியம் முழங்க பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டு பழனியப்பன்தெரு, தலையாரி தெரு, அறந்தாங்கிரோடுமுக்கம், சாமியார்மடம், மார்க்கெட், பெரியகடைத்தெரு,
பெரியதெரு வழியாக மீண்டும் மணிக்கூண்டு வந்தடைந்து நகர காவல் நிலையத்தில் முடிவடைந்தது. பட்டுக்கோட்டை போலீஸ் டி.எஸ்.பி. பாஸ்கர் தலைமையில் நடந்த கொடி அணிவகுப்பு பேரணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐக்கள், காவலர்கள் உள்பட வஜ்ரா வாகனத்துடன் 100க்கும் மேற்பட்டோர் பேரணியில் சென்றனர்.

CATEGORIES
TAGS