மக்களவை தேர்தலையொட்டி வேலூரில் காவல்துறையினர் மற்றும் சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது

மக்களவை தேர்தலையொட்டி வேலூரில் காவல்துறையினர் மற்றும் சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது
தமிழ்நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாக்களிப்பதன் அவசியம் குறிதும், தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும், பொதுமக்கள் அச்சமில்லாமல் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினரின் அணிவகுப்பு வேலூரில் நடைபெற்றது.
பாகாயம் பகுதியில் இருந்து துவங்கிய இந்த அணிவகுப்பு பகுதியில் ஓட்டேரி, விருபாட்சிபுரம், சாய்நாதபுரம், அண்ணாசாலை, லாங்கு பஜார் மார்கெட், தோட்டப்பாளையம் வழியாக கிரீன் சர்கிள் பகுதியில் முடிவடைந்தது.
இந்த அணிவகுப்பில் 100-சதவீதம் வாக்காளர்கள் அச்சமில்லாமல் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்துப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட வேலூர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் பங்கேற்றனர்.