BREAKING NEWS

மணிமுத்தாறு அணையின் தண்ணீர் திறக்கப்படவிட்டால் விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், MLA அறிக்கை.

மணிமுத்தாறு அணையின் தண்ணீர் திறக்கப்படவிட்டால் விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், MLA அறிக்கை.

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையின் 3 வது மற்றும் 4-வது ரீச் தண்ணீர் திறக்கப்படவிட்டால் விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் Ex., MLA அறிக்கை.

 

மணிமுத்தாறு 3-வது ரீச் மூலமாக பாணான்குளம், மூலைக்கரைப்பட்டி பகுதியில் உள்ள குளங்களுக்கும், 4-வது ரீச் மூலமாக விஜயநாராயணம், பகுதியில் உள்ள குளங்களுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது ஆனால் இந்த ஆண்டு இந்நாள் வரை தண்ணீர் திறக்கப்படவில்லை இதனால் விவசாய பணிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

இந்த ஆண்டு போதிய மழை இல்லாத காரணத்தினால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் மேலும் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.

எனவே மணிமுத்தாறு அணையின் 3 மற்றும் 4-வது ரீச் மூலம், வறண்ட குளங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று மேனாள் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் Ex., MLA அவர்கள் மாவட்ட ஆட்சி தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Share this…

CATEGORIES
TAGS