மண்ணச்சநல்லூர் உழவர் மையத்தில் பிரதம மந்திரி கிசான் சமான் நிதி திட்டத்தை பார்வையிட்டார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மண்ணச்சநல்லூர் உழவர் மையத்தில் பிரதம மந்திரி கிசான் சமான் நிதி திட்டத்தில் eKyc பதிவேற்றம் செய்யும் முகாம்மை பார்வையிட்டார்.
நலத்திட்ட உதவிகளாக தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் – முன்னிலை செயல்விளக்கம் திட்டத்தின் கீழ் ஒரு எக்டேர் பரப்பளவில் ( சிறுதானியம் ) சோளம் செயல்விளக்க திடல் அமைக்கவும், கம்பு செயல்விளக்க திடல் அமைக்கவும், மானிய விலையில் இடுப்பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
மேலும் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் – தரிசு நிலம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறுதானியம் – சோளம் சாகுபடி செய்ய இடுப்பொட்களை மானியத்தில் வழங்கி தொடங்கி வைத்தார்.
மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நெல் வயலில் வரப்பு பயிராக வரப்பு ஓரங்களில் உளுந்து விதைப்பு செய்ய 50 % மானியத்தில் உளுந்து விதை வழங்கினார்.
இந்நிகழ்வில் வேளாண்மை இணை இயக்குநர் முருகேசன், வேளாண்மை துணை இயக்குநர் ( மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ) மல்லிகா, மண்ணச்சநல்லூர் வட்டாரத்தின் வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயராணி, வேளாண்மை அலுவலர் ஐஸ்வர்யா, வேளாண்மை உதவி அலுவலர்கள் பார்த்திபன், பாஸ்கர், பாபு, ஆனந்த், பன்னீர்செல்வம், பாலாஜி,
வட்டார தொழில்நுட்ப மேலாளர் பூபதி, உதவி தொழில்நுட்ப மேலாளர் ராகினி பயிர் அறுவடை பரிசோதனை உதவியாளர் பழனி கிடங்கு கண்காணிப்பாளர் தேன்விமின், விற்பனை உதவியாளர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.