BREAKING NEWS

மதுரை அலங்காநல்லூர் அருகே விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் மிதந்த பெண் பிணம் – போலீஸ் விசாரணை

மதுரை அலங்காநல்லூர் அருகே விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் மிதந்த பெண் பிணம் – போலீஸ் விசாரணை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குலமங்கலம் – குமாரம் செல்லும் சாலையில் சாலையோர விவசாய கிணற்றில் அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் மிதப்பதாக அலங்காநல்லூர் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் 1 மணி நேரம் போராடி கயிற்று கட்டிலை தண்ணீர் கிணற்றில் இறக்கி சடலத்தை மீட்டனர். தொடர்ந்து கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சடலத்தை பரிசோதனை செய்தனர்.

 

அப்போது இளம்பெண் சடலத்தில் கால்கள் மற்றும் இடுப்பில் கயிறு கட்டப்பட்டிருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பிரேதத்தை மதுரை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

 

இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாரா? வேறு எங்கும் கொலை செய்யப்பட்டு இங்கு கொண்டு வந்து கிணற்றில் வீசப்பட்டாரா? என பல கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

 

சாலையோர கிணற்றில் இளம்பெண் சடலம் மிதந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

CATEGORIES
TAGS