BREAKING NEWS

மனித மலத்தை குடிநீரில் கலந்த சாதிய வெறியர்களை கண்டித்தும், கைது செய்ய வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருவெறும்பூரில் ஆர்ப்பாட்டம்.

மனித மலத்தை குடிநீரில் கலந்த சாதிய வெறியர்களை கண்டித்தும், கைது செய்ய வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருவெறும்பூரில் ஆர்ப்பாட்டம்.

திருச்சி,

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் ஊராட்சி, இறையூரில் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்த சாதி வெறியர்களை உடனடியாக கைது செய்திட கோரியும்,

 

 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயர் சிகிச்சையும் இழப்பீடும் வழங்கிட கேட்டும் தமிழகம் முழுவதும் தீண்டாமை கொடுமைகளை கலைந்திட இரும்பு கரம் கொண்டு அடக்கிட கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் காட்டூர் பகுதி குழுவின் சார்பில் திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

 

ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி செயலாளர் சந்தோஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட தலைவர் லெனின் கண்டன உரையாற்றினார். மாவட்ட துணை செயலாளர்கள் யுவராஜ், நிவேதா மற்றும் பகுதி நிர்வாகிகள் சுபாஷ் சந்திர போஸ், சாதிக், மோகன், தினேஷ் குமார் முன்னிலை வகித்தனர்.

 

 

இறுதியாக பாண்டியன் நன்றி கூறினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தீண்டாமை கொடுமைக்கு எதிராக கோஷமிட்டனர்.

 

CATEGORIES
TAGS