மன்னர் மேல்நிலைப் பள்ளியில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் கண்காட்சி.

செய்தியாளர் வி.ராஜா.
சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மக்கள் நலத்திட்டங்கள் விழிப்புணர்வு கண்காட்சி தொடங்கி வைத்தார் அமைச்சர் கே ஆர். பெரியகருப்பன்.
சிவகங்கை மாவட்டம் இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மத்திய மக்கள் தொடர்பகம் மூலமாக சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக வருகை புரிந்த உள்ள ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் திரு ப.மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியின் வாழ்த்துரை நகர் மன்ற தலைவர் சிஎம் துரைஆனந்த் அவர்கள் வழங்கினார். நோக்கவுரை மண்டல இயக்குநர் மத்திய மக்கள் தொடர்பகம் திரு ஜெ.காமராஜ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து அவர்கள், ஒன்றிய செயலாளர் ஜெயராமன் அவர்கள், நகர் மன்ற துணைத் தலைவர் கார் கண்ணன், நகர் மன்ற உறுப்பினர்கள் சேது நாச்சியார் வீரகாளை, ஜெயகாந்தன்,
விஜயகுமார், அயூப்கான், ராமதாஸ், கீதா கார்த்திகேயன், வழக்கறிஞர் ராஜஅமுதன், தொழில்நுட்ப பிரிவு சதிஷ் குமார், மாவட்ட மகளிரணி பவானி கணேஷ் , மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.