மயிலாடுதுறையில் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து மயிலாடுதுறையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்து வக்கீல் சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்று திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி மீது பொய் வழக்கு பதிவு செய்த திமுக அரசை கண்டித்து நிர்வாகிகள் பலர் கோஷங்களை எழுப்பினர்.
CATEGORIES அரசியல்
TAGS அதிமுகஅதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்அரசியல்எடப்பாடி பழனிச்சாமிஎடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவுதமிழ்நாடுதலைப்பு செய்திகள்மயிலாடுதுறைமயிலாடுதுறை மாவட்டம்முக்கிய செய்திகள்