BREAKING NEWS

மயிலாடுதுறையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வழங்கினார்.

மயிலாடுதுறையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் பொது சுகாதார குப்பை சேகரிப்பு டிராக்டர் ஓட்டுநராக பணிபுரிந்து,..

 

27.05.2022 அன்று பணியிடை காலமான சிவக்குமார் என்பவரின் வாரிசு தாரரான மகன் விவ பிரகதீஸ் என்பவருக்கு பொது சுகாதார குப்பை சேகரிப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வழங்கினார்.

 

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் (பொ) அம்பிகாபதி, சமூக பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியர் ஐ.கண்மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் அர.நரேந்திரன் (பொது) ஜெயபாலன் (வேளாண்மை) குத்தாலம் பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் ஆகியோர் உடன் இருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS