BREAKING NEWS

மயிலாடுதுறை அருகே மொழிப்போர்  தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, போலீசார் அறிவுறுத்தலின் பேரில் திமுக கட்சிக்கொடி பேனரை திமுகவினர் அகற்றிய பின்னர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்.

மயிலாடுதுறை அருகே மொழிப்போர்  தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, போலீசார் அறிவுறுத்தலின் பேரில் திமுக கட்சிக்கொடி பேனரை திமுகவினர் அகற்றிய பின்னர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்.

மயிலாடுதுறை மாவட்டம், மொழிப்போர்  தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி முகப்பில் அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகி மாணவர் சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் திமுகவினர் வைத்திருந்த பிளக்ஸ் பேனரையும் கட்சி கொடியையும் அதிமுகவினர் அகற்றக் கோரியதால் பரபரப்பு.

 

போலீசார் அறிவுறுத்தலின் பேரில் திமுக கட்சிக்கொடி பேனரை திமுகவினர் அகற்றிய பின்னர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்.

 

 

இந்தியாவில் மத்திய அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல் மொழி சட்டம் 1963-ஐ அமல்படுத்துவதை எதிர்த்து தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரியில் வணிகவியல் முதலாம் ஆண்டு படித்த மாணவர் சாரங்கபாணி 1965-இல் கல்லூரி வளாகத்திலேயே தன்மீது தீவைத்து கொண்டு உயிர் நீத்தார்.

 

அவரது நினைவைப் போற்றும் வகையில், கல்லூரி வாயிலில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இன்று மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்து கட்சியினர் தியாகி சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

 

திமுக சார்பில் அஞ்சலி செலுத்துவதற்காக நினைவு ஸ்தூபி அருகில் கட்சி கொடி நடப்பட்டும் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அனைத்து கட்சியினரும் அஞ்சலி செலுத்தும் இடத்தில் உள்ள திமுக கொடியையும் பேனரையும் அப்புறப்படுத்தினால்தான் அஞ்சலி செலுத்துவோம் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை போலீசார் அறிவுறுத்தியதன் பேரில் அப்பகுதி திமுக பொறுப்பாளர்கள் திமுக பேனர் மற்றும் கட்சி கொடியை அகற்றினர். தொடர்ந்து மொழிப்போர் தியாகி சாரங்கபாணி நினைவுஸ்தூபியில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில் முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் பங்கேற்று  மலர் வளையம் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

 

தொடர்ந்து மொழிப்போர் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகி சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுகவினர் வீரவணக்கம் செலுத்தினர். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாரதி, ராதாகிருஷ்ணன், ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS