மயிலாடுதுறை கீழ நாஞ்சில் நாடு பிரசித்தி பெற்ற சியாமளா வல்லி அம்மன் ஆலய பங்குனி உத்திர பால் குட திருவிழா ஏராளமான பக்தர்கள் அலகு காவடி எடுத்தனர்,

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கீழ நாஞ்சில்நாட்டில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சியாமளா வல்லி அம்மன் கோயில்.இக்கோயிலில் பங்குனி உத்திர பெருவிழாவை ஒட்டி, பக்தர்கள் காப்பு கட்டி காவேரி கரையிலிருந்து மேள தாளம் முழங்க பால்குடம் அலகு காவடி எடுத்து வீதியுலா வந்தனர் அப்போது, பக்தர்கள் ஆரத்தி எடுத்து அம்பாளை வழிப்பட்டனர் பின்,பால்குடம்,அலகு காவடி கோயிலுக்கு வந்ததும்,சியாமளா வல்லி அம்மனுக்கு பால் அபிசேகம் நடைபெற்று அபிசேக ஆராதனைகள் செய்தனர்.இந்த பால்குட திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும் அலகு காவடி எடுத்தும் தங்கள் நேர்த்தி கடனை செய்தனர்.பின் கோயிலில் மிக சிறப்பாக அண்ணதானமும் நடைபெற்றது.
CATEGORIES மயிலாடுதுறை