மயிலாடுதுறை, குத்தாலம், அகரசென்னியநல்லூர் அருள்மிகு மஹா முனிஸ்வரர் திருக்கோயில் ஜீர்ணோதாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அருள்மிகு மஹா முனிஸ்வரர் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அகரசென்னியநல்லூர் அருள்மிகு மஹா முனிஸ்வரர் திருக்கோயில் ஜீர்ணோதாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோபூஜை இரண்டாம் கால யாகபூஜை துவக்கம் ஸ்பர்சாஹீதி பூர்ணாஹிதி யாத்ராதானம் தொடர்ந்து நேற்று காலை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததை அடுத்து மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று புனித நீர் அடங்கிய கரங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு முனீஸ்வரர் கோபுரகலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
பக்தர்களுக்கு தீர்த்த பிரசாத விநியோகமும் நடைபெற்றது இதில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
CATEGORIES மயிலாடுதுறை