BREAKING NEWS

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கம். அதிரடி ரெய்டு நடத்தி 3 இளைஞர்கள் கைது; பதுக்கி வைத்து விற்பனை செய்த கஞ்சா பறிமுதல்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கம். அதிரடி ரெய்டு நடத்தி 3 இளைஞர்கள் கைது; பதுக்கி வைத்து விற்பனை செய்த கஞ்சா பறிமுதல்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கம். அதிரடி ரெய்டு நடத்தி 3 இளைஞர்களை கைது செய்து, வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை:- 

 

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவர்கள் பலரும் இந்த தீய பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளது வேதனையை ஏற்படுத்த கூடியதாக உள்ளது.

 

கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கஞ்சா விற்பனை ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போதிலும் அவர்கள் ஜாமினில் வெளிவந்து மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதால் 40 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. 

 

 

இருந்த போதிலும் கஞ்சா விற்பனை செய்துவருவதை முழுமையாக தடுக்க முடியவில்லை. செம்பனார்கொவில் காவல்சரகத்திற்கு உட்பட்ட விளநகர் கிராமத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா உத்தரவின்பேரில், மதுவிலக்கு காவல் ஆய்வாளர் நாகரத்தினம் தலைமையில் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். 

 

அங்கு விஷ்வா என்பவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

 

 

இதையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட விளநகர் விஷ்வா(22) மற்றும் அவரது கூட்டாளிகள் செம்பனார்கோவில் ஆகாஷ்(22), கீழையூர் ஐயப்பன்(23) ஆகிய மூன்று இளைஞர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து அரைகிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

 

இதைடுத்து போலீசார் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

 

CATEGORIES
TAGS