மழைஉடுமலை அமைப்பின் 35 வது வார மரக்கன்றுகள் நடும் விழா.!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில், “மழை உடுமலை” அமைப்பின் 35 வது வார மரம் நடும் விழா உடுமலைப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் திருமதி டி.ராஜேஸ்வரி தலைமை வகித்தார்.
பயிற்றுனர் ரமேஷ்குமார் மழை உடுமலை ஒருங்கிணைப்பாளர் கருணாநிதி திட்ட இயக்குனர் துரை.ஜவஹர் அமைப்பின் செயல்பாடுகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
இதில் 100க்கும் மேற்பட்ட மகோகனி,தேக்கு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. மத்திய அரிமா சங்கத்தலைவர்
அரிமா.மணி, கிழக்கு அரிமா சங்கம்,வாசவி கிளப், அபெக்ஸ் சங்க உறுப்பினர்கள் வனத்துக்குள் திருப்பூர் ஊழியர்கள், தொழிற்பயிற்சி நிலைய ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
CATEGORIES திருப்பூர்
TAGS கல்விதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பூர் மாவட்டம்மரக்கன்றுகள் நடும் விழாமழை உடுமலை அமைப்புமுக்கிய செய்திகள்