BREAKING NEWS

மானாமதுரை கணபதியேந்தல் பூரண கும்ப சின்னத்துடன் கூடிய கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு.

மானாமதுரை கணபதியேந்தல் பூரண கும்ப சின்னத்துடன் கூடிய கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு.

செய்தியாளர் வி.ராஜா.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் அழகாபுரிக்கு அருகில் கணபதியேந்தல் கிராமத்திற்கு செல்லும் சாலைக்கு நேர் எதிராக உள்ள கோவிலில் பூரண கும்பம் புடைப்புச் சிற்பமாக இடம் பெற்ற ஒரு துண்டு கல்வெட்டு பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம், முனைவர்.தாமரைக்கண்ணன் மற்றும் க.புதுக்குளத்தைச் சேர்ந்த சிவக்குமார் ஆகியோரின் கள மேற்பரப்பாய்வில் கண்டறியப்பட்டது மேலும் அவர்கள் கூறியதாவது.

 

கிரந்த கல்வெட்டு இந்த கல்வெட்டு ஒரு கிரந்த கல்வெட்டாகும் இந்த கல்வெட்டின் மேற்பகுதி ஒழுங்கற்ற நிலையில் சிதைந்து காணப்படுகிறது மேலும் கல்வெட்டின் தொடக்கம் காணப்படவில்லை என்பதால் இது ஒரு துண்டு கல்வெட்டாகும் இந்த கல்வெட்டு ஒரு சில வார்த்தைகளை தவிர மற்றவை மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுவதால் கல்வெட்டின் சாராம்சத்தை புரிந்து கொள்ள முடியவில்லை,..

 

 

இருந்தாலும் இந்த கல்வெட்டில் “ரதம்- ராமராஜ- ஓங்கு” போன்ற வார்த்தைகளை மட்டும் வைத்து பார்க்கும் போது இந்த கல்வெட்டு பாதுகாப்பு சம்பந்தமான கல்வெட்டாகவோ அல்லது தானம் சம்பந்தமான கல்வெட்டாகவோ கருதலாம் பூரண கும்பம் இந்த கல்வெட்டின் கீழே பொங்கி வழியும் ஒரு கும்பம் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

 

இந்த அமைப்பை பார்த்தால் இப்பகுதி முற்காலங்களில் எவ்வளவு வளமையாகவும் செழுமையாகவும் இருந்திருக்க வேண்டும் என்பதனை குறியீடாக நமக்கு உணர்த்துகிறது மேலும் இந்த கல்வெட்டில் கிரந்த எழுத்துகள் மற்றும் பூரண கும்பம் புடைப்புச் சிற்பமாக இடம் பெற்றிருப்பதையும் வைத்து பார்க்கும் போது இந்த கல்வெட்டு பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டாக இருக்கலாம் என்று அவர்கள் கூறினார்கள். 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )