மானாமதுரை செங்கல் சூளையில் தீ முட்டுவதால் புகை,மூச்சு திணறல் அப்பகுதி மக்கள் பதிப்பு.

செய்தியாளர் வி.ராஜா.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த தாயமஙகலம் ரோட்டில் செங்கல் சூளை அமைந்துள்ளது. இந்த செங்கல் சூளையில் கடந்த சில நாட்களாக தீ அதிகமாக முட்டுவதால் அப்பகுதி மக்கள் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர்.
செங்கல் சூளையில் தீ முட்டுவதால் அதிக அளவு புகை வருவதால் ஆஸ்துமா வியாதி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் மக்கள் அச்சம் தெரிவிதத்து வருகின்றனர்.
அதே பகுதியில் தாயமாங்லம் மெயின் ரோட்டில் செங்கல் சூளையில் தீ முட்டுவதால் அருகில் பெட்ரோல் பங்க் இருப்பதால் எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் மக்கள் செங்கல் சூளையில் பணி செய்யும் பணியாளர்களளிடம் நிர்வாகத்திடம் பல முறை தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.
உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனார்.