மாமன்னர் கோவில்பட்டியில் திருமலை நாயக்கர் 440 வது பிறந்தநாள் விழா

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
கோவில்பட்டியில் மாமன்னர் திருமலை நாயக்கர் 440 வது பிறந்தநாள் விழா மற்றும் ஞான குருநாதர் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் 55 ஆவது ஆண்டு அன்னதான குருபூஜை விழாவில்,
முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாமன்னர் திருமலை நாயக்கர் 440 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சீனிவாசன் நகர் பகுதியில் மாமன்னர் திருமலை நாயக்கர் இளைஞர் பேரவை சார்பில் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
திருமலை நாயக்கர் இளைஞர் பேரவை நிறுவன தலைவர் சிவன்ராஜ் தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மாமன்னர் திருமலை நாயக்கர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஞான குருநாதர் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் 55 ஆவது ஆண்டு அன்னதான குருபூஜை விழா நடைபெற்றது.
ஜோதி சோமசுந்தரம் தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகர செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், பழனி குமார், கோபி, முருகன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.