BREAKING NEWS

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவசேனா கட்சி இளைஞர் அணி சார்பாக ஆட்சியரிடம் கோரிக்கை மனு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவசேனா கட்சி இளைஞர் அணி சார்பாக ஆட்சியரிடம் கோரிக்கை மனு

 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவசேனா கட்சியின் இளைஞரணி மாவட்டத் தலைவர் கார்த்திக் தலைமையில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் மங்களாதேவி கண்ணகி கோயில் திருவிழா இந்த ஆண்டு வருகின்ற 05.05.2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ள சித்ரா பௌர்ணமி முழு நிலவு விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு,

 

அடிப்படை வசதிகள் குடிநீர், கழிப்பறைகள், குப்பைத்தொட்டி வசதி மருத்துவ வசதி மற்றும் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து தர வேண்டும் மேலும் மங்களதேவி கண்ணவி கோயிலில் சித்ரா பௌர்ணமி விழாவினை மூன்று நாட்கள் விழாவாக நடத்திட அனுமதி வழங்க வேண்டும்.

திருவிழா தினத்தில் மாவட்ட அளவில் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் பக்தர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் விழா கால சிறப்பு பேருந்துகளை அதிக எண்ணிக்கை விட வேண்டும் மங்களதேவி கண்ணகி கோயிலில் தமிழக அர்ச்சகர்கள் மூலம் தமிழில் அர்ச்சனை செய்து பூஜை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS