மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட
வி. கே வேலுச்சாமி சின்னம்மாள் தனியார் மஹாலில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இநத நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ரூபன் சங்கர் ராஜ், முன்னோடி வங்கி மேலாளர் மோகன் குமார், எம்எல்ஏ கள் சரவணன் மகாரா ஜன், தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணு பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 113 சுய உதவிக் குழுக்களில் 1441 பயனாளிகளுக்கு 7 கோடியே 77 லட்சம் ரூபாயும்,
போடி ஒன்றியத்தில் 94 சுய உதவிக் குழுக்களில் 1107 பயனாளிகளுக்கு 4 கோடியே 47 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும்,
சின்னமனூர் ஒன்றியத்தில் 76 சுய உதவிக் குழுக்களில் 943 பயனாளிகளுக்கு 6 கோடியே 15 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும்,
கம்பம் ஒன்றியத்தில் 23 சுய உதவிக் குழுக்களில் 286 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 49 லட்சம் ரூபாயும், கடமலை/ மயிலை ஒன்றியத்தில் 78 சுய உதவிக் குழுக்களில் 941 பயனாளிகளுக்கு 6 கோடியே 46 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், பெரியகுளம் ஒன்றியத்தில் 200 சுய உதவிக் குழுக்களில் 2400 பயனாளிகளுக்கு 10 கோடியே 42 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும்,
தேனி ஒன்றியத்தில் 135 சுய உதவிக் குழுக்களில் 1639 பயனாளிகளுக்கு 11 கோடியே 47 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயும்,
உத்தமபாளையம் ஒன்றியத்தில் 99 சுய உதவிக் குழுக்களில் 1192 பயனாளிகளுக்கு 6 கோடியே 66 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், நகர் புற பகுதிகளில் 118 சுய உதவிக் குழுக்களில் 1376 பயனாளிகளுக்கு 6 கோடியே 44 லட்சம் ரூபாயும்,
பெரியகுளம் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 6 சுய உதவிக் குழுக்களில் 450 பயனாளிகளுக்கு 11 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என்று மொத்தம் தேனி மாவட்டத்தில் 942 சுய உதவிக் குழுக்களில் 11,775 பயனாளிகளுக்கு 61 கோடியே 47 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்டங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் துறை சார்ந்த அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.