மின் கட்டண உயர்வையும் திமுக அரசையும் கண்டித்து, நெல்லை ரயில் சந்திப்பு நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம்,
மின் கட்டண உயர்வை அறிவித்து தமிழக மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசை கண்டித்தும்,மின் கட்டண உயர்வு அறிவிப்பை உடனடியாக திரும்பிப் பெற வலியுறுத்தியும்,
திருநெல்வேலி மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளர் தச்சை என்.கணேசராஜா தலைமையில், திருநெல்வேலி ரயில் சந்திப்பு நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கழக முன்னணி நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள், தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
CATEGORIES திருநெல்வேலி
