முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் பாமக தலைவர் அன்புமணி!
பாமக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ், இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவருக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.
அதையடுத்து இன்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அதன் கெளரவத் தலைவர் ஜிகே மணி, மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோருடன் சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பல்வேறு கோரிக்கைகளையும் முதல்வரிடம் முன்வைத்தார்.
CATEGORIES Uncategorized