முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாம்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான இன்று பள்ளிவாசல்
மேல்நிலைப்பள்ளி சாலை பாதுகாப்பு மன்றம் சார்பாக, சாலை பாதுகாப்பு, தலைகவசம் அணிதல், போக்குவரத்து விதிகளை மதித்தல் போன்ற தடுப்பு செயல் விளக்கம் செய்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி காத்தாகுளம் ஊராட்சி மன்றத்தலைவி திருமதி இந்திராகாந்தி புயல்நாதன் அவர்கள் தலைமையிலும், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் புயல்நாதன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது .அனைவரையும் நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர் திரு. நூருல் அமீன் அவர்கள் வரவேற்றார்கள்.
இம்முகாமில் சாலை பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் பட்டதாரி ஆசிரியர் திரு. அந்தோணிடேவிட் அவர்கள் கலந்து கொண்டு சாலை விபத்து மற்றும் ஏற்பட்டால் அதை தடுப்பது குறித்தும், சாலை விதிமுறைகளையும், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தையும் செயல் விளக்கம் மூலம் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். பட்டதாரி ஆசிரியர் ஜே.ஆர்.சி பரமேஸ்வரன் உடன் இருந்தார்கள்.
மேலும் நிகழ்ச்சியின் சிறப்பாக நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களால் ஒருங்கினைக்கப்பட்ட சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தினை ஊராட்சி மன்றத் துணைத்லைவர் புயல்நாதன் மற்றும் தலைமையாசிரியர் முகம்மது சுல்த்தான் அலாவூதீன் ஆகியோர் கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தனர்.
ஊர்வலம் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முடிவடைந்தது. இறுதியாக பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் முகம்மது சுல்தான் அலாவூதீன் அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.
இதில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களும், ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர். அதன்பிறகு நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் உழவார பணிகளில் ஈடுபட்டனர்.