BREAKING NEWS

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது – 20 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 39,000/- பணம் பறிமுதல்.

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது – 20 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 39,000/- பணம் பறிமுதல்.

கஞ்சா வைத்திருந்தவர் கைது – 20 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 39,000/- பணம் பறிமுதல்.

 

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) மூக்கன் தலைமையில் உதவி ஆய்வாளர் சுந்தர் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில்,

 

முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர் மணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி உட்கோட்ட தனிப்படை போலீசார் நேற்று (08.04.2023) முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம் பிள்ளையார் கோவில் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் அஜய் (22) என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

 

உடனே மேற்படி தனிப்படை போலீசார் எதிரியான அஜய் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 20 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 39,000/- பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS