முத்தையா உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளியின் குப்பைகளை கொட்டும் காட்சி.. பரபரப்பு.

தேனி நகர் பகுதியில் அமைந்துள்ள அல்லிநகரம் முத்தையா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இருவர் பள்ளியின் குப்பைகளை சாலையில் சுமந்து வந்து சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டியில் கொட்டிக் கொண்டிருந்த காட்சியை…
அந்தப் பகுதியை சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இந்த காட்சிகள் தற்போது தேனி பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜக்கம்பட்டியில் பள்ளி மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய விவகாரம் விஸ்வரூபமான நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை மாற்றம் செய்யப்பட்ட சூழலில் மீண்டும் தேனி மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
CATEGORIES தேனி
TAGS அல்லிநகரம்குற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேனி மாவட்டம்பள்ளி மாணவர்கள் குப்பை கொட்டும் வீடியோமுக்கிய செய்திகள்முத்தையா உயர்நிலைப் பள்ளி