BREAKING NEWS

மேல்பாடி அடுத்த சிவானூர் பகுதியில் சென்னை பெங்களூர் விரைவு சாலை அமைப்பதால் கிராமத்திற்கு சாலை வசதி கோரி பொதுமக்கள் ஆர்பாட்டம்.

மேல்பாடி அடுத்த சிவானூர் பகுதியில் சென்னை பெங்களூர் விரைவு சாலை அமைப்பதால் கிராமத்திற்கு சாலை வசதி கோரி பொதுமக்கள் ஆர்பாட்டம்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மேல்பாடி சிவானூர் பகுதியில் சென்னை பெங்களூர் விரைவு சாலை அமைக்கப்பட்டு வருகின்றது இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிவானூர் பகுதிக்கு செல்லும் பிரதான சாலை மூடப்பட்டு சென்னை பெங்களூர் விரைவு சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது.

 

இந்நிலையில் நேற்று சிவானூர் பகுதியில் மோகன் என்பவருக்கு விஷ பாம்பு கடித்துள்ளது இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்த உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிவானூர் பகுதிக்கு வர முடியாது எனவும் மேலும் மூன்று கிலோமீட்டர் உள்ள மேல்பாடி பகுதிக்கு அழைத்து வாருங்கள் என கூறியதாக கூறப்படுகின்றது.

 

 

இதனையடுத்து சென்னை பெங்களூர் விரைவு சாலை அமைப்பதால் தான் தங்கள் கிராமத்திற்கு போக்குவரத்து தடைபட்டுள்ளதாகவும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் தின கூலி உள்ளிட்ட வேலைகளுக்கு செல்பவர்கள் என பலதரப்பட்ட மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்று கூறப்படுகின்றது.

 

இதனால் ஆத்திரமடைந்த சிவானூர் கிராம பொதுமக்கள் சென்னை பெங்களூர் விரைவு சாலை அமைக்கும் சாலையில் அமர்ந்து சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனை அறிந்த பொன்னை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் எஸ்ஐ ஆனந்தகுமார் எஸ்பி தனி பிரிவு காவலர் செந்தில் எஸ்எஸ்ஐ பெருமாள் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிவானூர் பகுதி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

 

இதனையடுத்து சென்னை பெங்களூர் விரைவு சாலை அமைக்கும் அதிகாரிகளை அழைத்து உடனடியாக சிவானூர் பகுதி பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பதாகவும் நாளை காலை தங்கள் கோரிக்கைகள் முழுவதும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததை அடுத்து கிராம பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் இதனால் மேல்பாடியில் சென்னை பெங்களூர் விரைவு சாலை அமைக்கும் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

மேல்பாடி பகுதியில் சென்னை பெங்களூர் விரைவு சாலை அமைக்கும் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிவானூர் கிராம பொதுமக்களிடம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தைக்குப் பின்பு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டது பொதுமக்களின் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

CATEGORIES
TAGS