BREAKING NEWS

மேல்மாங்குப்பம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா..!

மேல்மாங்குப்பம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா..!

மேல்மாங்குப்பம் ஸ்ரீ பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா. 

வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த கே வி குப்பம் தாலுகா மேல்மாயில் அடுத்த மேல்மாங்குப்பம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

 

முன்னதாக விழாவில் வருவாய்த் துறையினர் முன்னிலையில் விழா குழுவினர் உறுதிமொழி ஏற்றனர். இதில் வேலூர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, அண்டை மாநிலமான ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன பங்கேற்ற காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து சென்றன.

 

இந்த எருது விடும் திருவிழா இரண்டு சுற்றுகள் நடைபெற்றது அதில் குறித்த நேரத்தில் இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசாக 1,00,000 இரண்டாம் பரிசாக 80,000 ரூபாய்யும், மூன்றாம் பரிசாக 65,000 ரூபாயும் நான்காவது பரிசாக 50,000 ரூபாயும் என மொத்தம் 101 பரிசுகள் வெற்றி பெற்ற காளைகளுக்கு வழங்கப்பட்டன.

 

இந்த எருது விடும் விழாவை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர் காளைகள் முட்டியதில் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் காயமடைந்தவர்களுக்கு அங்கே இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர் மேலும் எருது விழும் விழாவை முன்னிட்டு கே.வி.குப்பம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

CATEGORIES
TAGS