BREAKING NEWS

மே :17 சிவபுரம் செல்லும் சாலையை திறக்க களக்காடு நகராட்சி ஆணையரிடம் எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை..

மே :17 சிவபுரம் செல்லும் சாலையை திறக்க களக்காடு நகராட்சி ஆணையரிடம் எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை..

திருநெல்வேலி மாவட்டம்; களக்காடு நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டு பொது மக்களின் பயன்பாட்டில் உள்ள சிவபுரம் செல்லும் பாதை கடந்த 15 நாட்களுக்கு மேல் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 

சுட்டெரிக்கும் கோடை வெயில் உக்கிரமடைந்திருக்கும் நிலையில், சிவபுரம் பகுதியில் உள்ள நீரோடைக்கு பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, பொது மக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு களக்காடு நகராட்சிக்கு உட்பட்ட சிவபுரம் பகுதிக்குச் செல்லும் பாதையை விரைவாக திறக்க வேண்டும் என்று,

எஸ்டிபிஐ கட்சியின் களக்காடு நகர தலைவர் கமாலுதீன் களக்காடு நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தார். இந்நிகழ்வில் நகர செயலாளர் காஜா முகைதீன், செயற்குழு உறுப்பினர் ஆரிப் பைஜி மற்றும் வர்த்தகர் அணி மாவட்ட துணை தலைவர் பீமாஸ் உசேன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS