BREAKING NEWS

ரயில்வே ஊழியரை மிரட்டி செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய 3 சிறுவர்கள் கைது.

ரயில்வே ஊழியரை மிரட்டி செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய 3 சிறுவர்கள் கைது.

திருச்சி பொன்மலையில் வட மாநில ரயில்வே ஊழியரை மிரட்டி செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய 3 சிறுவர்கள் கைது – திருட்டு செல்போனை வாங்கிய நபரும் கைது செய்யப்பட்டார்.

 

திருச்சி பொன்மலை பொன்னேரிபுரம் அருகே திருநகர் பகுதியில் வசித்து வருபவர் வட மாநில வாலிபரான ஜஸ்வந்த் தாஸ் வயது (28) பொன்மலை ரயில்வே பணிமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

 

இந்த நிலையில் இவர் கடந்த வாரம் சைக்கிளில் வேலைக்கு செல்வதற்காக பொன்மலை சூசையப்பர் சர்ச் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் கீழே விழுந்துள்ளது.

 

அதனை அங்கு நின்று கொண்டிருந்த 3 சிறுவர்கள் அவரை மிரட்டி அந்த செல்போனை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து ஜஸ்வந்த் தாஸ் பொன்மலை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வந்தனர்.

 

இந்த நிலையில் அவரது செல்போனை திருடி சென்ற பொன்மலைப்பட்டி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த கிறிஸ்டி இம்மானுவேல் (16) கொட்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மதன் (14), திருநகர் ஏழாவது குறுக்கு தெருவை சேர்ந்த கிஷோர் குமார் (15) ஆகிய 3 சிறுவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிந்து அவர்களை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும் இந்த சிறுவர்களிடம் திருட்டு செல்போனை வாங்கிய பொன்மலை அடைக்கல அன்னை நகரை சேர்ந்த சக்திவேல் முருகன் வயது 32 என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )