ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் வெற்றி விழா.

தஞ்சை,
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் வெற்றி விழா நடைபயணம் தஞ்சையில் நடந்த போது காங்கிரஸ் கட்சியினர் தேசிய கொடியை தலைகீழாக ஏற்றியது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி பாரத் ஜோடா என்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டார் இதன் வெற்றி விழா நடைபயணம் தஞ்சையில் சிவகங்கை பூங்கா முதல் கீழவாசல் காமராஜர் சாலை வரை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தேசிய கொடியை ஏற்றும்போது தலைகீழாக ஏற்றியதால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக சுதாரித்துக் கொண்டு மீண்டும் அந்த கொடியை கீழே இறக்கி வேண்டும் சரியாக தேசிய கொடியை ஏற்றினர்.
CATEGORIES அரசியல்
TAGS அரசியல்இந்திய காங்கிரஸ் கட்சிதஞ்சாவூர்தஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்