BREAKING NEWS

ராஜபாளையத்தில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 375 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது.

ராஜபாளையத்தில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 375 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது.

பதுக்கலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒரு டெம்போ வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில் ஆசிரியர் காலனி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 375 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த மம்சாபுரத்தை சேர்ந்த ஜெயசந்திரன், வடக்கு மலையடிப்பட்டியை சேர்ந்த பிரகாஷ் மற்றும் இசக்கி முத்து ஆகிய மூவரை கைது செய்துள்ள காவல் துறையினர், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டெம்போ வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

செய்தியாளர் ம.வெள்ளானைப்பாண்டியன்.

CATEGORIES
TAGS