BREAKING NEWS

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் பாரத் மிகு மின் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் தொழிற்சாலை வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ..

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் பாரத் மிகு மின் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் தொழிற்சாலை வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ..

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த முகுந்தராயபுரம் பகுதியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் மிகுமின் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது இதில் 1500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்

இந்நிலையில் பாரத் மிகுமின் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இன்டர்னல் செலக்சன் என்கிற முறை வாயிலாக Rigger Gr-4 தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது

இந்நிலையில் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்கள் பயிற்சியை நிறைவு செய்த பிறகும் அவர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்காமல் அவர்களை தொழிற்சாலை நிர்வாகம் அழக்கழித்துவதாகவும் இதன் காரணமாக அந்த ஊழியர்கள் பெரிதளவில் பாதிக்கப்படுவதாகவும் கூறி இந்த மெத்தன போக்கை கடைபிடிக்கும் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து BAPEGTU/INTUC, BAPEU/NFITU ஆகிய இரண்டு தொழிற்சங்கங்கள் இணைந்து தொழிற்சாலை வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொழிற்சாலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS