ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி, அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு..!!
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி, அவர்கள் இன்று சோளிங்கர்
அடுத்த கொடைக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2023-24 ஆண்டுக்கான அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்து பள்ளியில் சேர்ந்த
குழந்தைகளுக்கு புத்தகங்கள், எழுது பொருட்கள் வழங்கி வரவேற்றார்கள்.
உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் பிரேமலதா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, உதவி திட்ட அலுவலர் துரைவேல், தலைமை ஆசிரியர் ரங்கநாயகி, ஊராட்சி மன்ற தலைவர் ஹேமச்சந்திரன் ஆகியோர் உள்ளனர்.
மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
CATEGORIES ராணிபேட்டை
TAGS அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது குறித்த விழிப்புணர்வுகொடைக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிசோளிங்கர்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதிராணிப்பேட்டை மாவட்டம்